Tuesday, September 27, 2011

பைபிள் - ஒரு கண்ணோட்டம்

பைபிள் " கடவுளால் ஏவப்பட்டிருக்கிறது "( 2 தீமோத்தேயு 3:16 ).ஆம், கடவுள் நம்மோடு பேசுவதற்க்கு,மனுஷர்களை பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு,அவர்கள் மூலமாய் நமக்கு பல விஷயங்களை தெரியப்படுத்துக்கிறார்.
உதாரணமாக,நட்சத்திர வானமும்,சிங்கார பூமியும்,முதல் மனிதத் தம்பதியும் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றியும் நமக்கு தெரியபடுத்துக்கிறார். பிரச்சனைகளையும்,கவலைகளையும் சமாளிக்க உதவுக்கிற நம்பகமான வார்த்தைகளையும் தருகிறார்.அதுமட்டுமல்ல,அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி இந்தப் பூமியை எப்படி நல்ல நிலைக்கு கொண்டு வருவார் என்றும் தெளிவாக விளக்குகிறார்.
பைபிளில் 66 புத்தகங்கள் உள்ளன.இவற்றில் கடிதங்களும் அடங்கும். எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக, அவை அதிகாரங்களாகவும்,வசனங்களாகவும்,பிரிக்கப்பட்டிருக்கின்றன.வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கையில்,பைபிள் புத்தகத்தின் அல்லது கடிதத்தின் பெயருக்கு அடுத்தாற்போல் உள்ள முதல் எண் அந்தப் புத்தகத்தின் அல்லது கடிதத்தின் அதிகாரத்தைக் குறிக்கிறது.அதற்கடுத்துள்ள எண் வசனத்தைக் குறிக்கிறது.உதாரணத்திற்க்கு, " 2 தீமோத்தேயு 3:16 " என்பது தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தில்,3-ம் அதிகாரத்திலுள்ள 16-ம் வசனத்தைக் குறிக்கிற்து.
பைபிளை எழுதி முடிக்க 1,600-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பிடித்தன. அதை எழுதியவர்கள் வெவ்வெறு காலபகுதியில் வாழ்ந்தவர்கள்.அதுவும் வித்தியாசமான 
பின்னணியைச் சேர்ந்தவர்கள்.சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா ஒரு மருத்துவராக இருந்தார்.இப்படி வெவ்வெறு  பின்னணியிலிருந்து வந்தவர்கள் பைபிளை எழுதியிருந்தாலும்,ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அது முரண்பாடில்லாமல் ஒத்திசைவாகவே இருக்கிறது.
மனிதகுலத்தின் பிரச்சினைகள் எவ்வாறு ஆரம்பமாயின என்பதை பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது.முழு பூமியுமே ஒரு பரதீஸாக
,அதாவது பூங்காவாக மாற போகிறது என்பதை அதன் கடைசி புத்தகம் காண்பிக்கிறது.பைபிள் பதிவுகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான வருடங்களின் சரித்திரத்தை உள்ளடக்கியவை. இவை அனைத்தும் கடவுளுடைய சித்தமாய் இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக பைபிள்  துல்லியமானது. அத்துடன்,மனிதர் கண்டு பிடிப்பதற்க்கு வெகு காலத்திற்கு முன்னரே பல உண்மைகளை அது வெளிபடுத்தியிருக்கிறது.உதாரணமாக, நோயாளிகளைத் தனியாகப் பிரித்து வைப்பது,சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றிற்கான சட்டங்கள், லேவியராகமப் புத்தகத்தில் இருக்கின்றன; அதே போல, பூமியின் வடிவத்தைப் பற்றி தவறான கருத்துக்கள் நிலவிய சமயத்தில் பூமி உருண்டையானது என பைபிள் குறிப்பிட்டிருந்தது. ( ஏசாயா 40:22 )
அதுமட்டுமல்ல பூமி ' அந்தரத்திலே தொங்குகிறது ' எனவும் அது துல்லியமாகச் சொன்னது. (யோபு 26:7 )
பைபிள் கடவுளால் ஏவப்பட்டிருப்பதால் அது ' உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்,சீர்திருத்தலுக்கும்...பிரயோஜனமுள்ளதாய் ' இருக்கிறது. ( 2 தீமோத்தேயு 3:17 ). ஆம், பைபிள் நடைமுறைக்கேற்ற ஒரு புத்தகம். மனிதர்களுடைய சுபாவத்தை அது அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.
மலைப் பிரசங்கம் என்றழைக்கப்படும் இயேசுவின் போதனையை எடுத்துக் கொள்ளுங்கள்,மத்தேயு 5 முதல் 7 வரையான அதிகாரங்களில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.தலை சிறந்த அந்த போதனையில் ,உண்மையான சந்தோஷத்தை எப்படிக் கண்டடைவது,சண்டை சச்சரவுகளை எப்படி தீர்ப்பது,எப்படி ஜெபிப்பது,பொருளுடைமைகளைப் பற்றி எப்படி சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது போன்ற அநேக விஷயங்களை குறிப்பிட பட்டுள்ளது.இப்படி நாம் வாழ்க்கையில் ஏற்படும் பல சூழ்நிலையை எதிர்கொள்ள பைபிள் வழிக்காட்டியாகவும் இருக்கிறது.
பைபிளை ஒரு தீர்க்கதரிசன புத்தகம் என்றும் அழைக்கலாம், காரணம்,
பைபிளிள் ஏராளமான தீர்க்கதரிசன ங்கள் உள்ளன.அவற்றில் பல ஏற்கெனவே நிறைவேறிவிட்டன.ஒர் உதாரணத்தைக் கவனியுங்கள். பாபிலோன் நகரம் அழிக்கப்படும் என்று பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் முன்னறிவித்தார். (ஏசாயா 13:19, 14:22,23). இது எப்படி நடக்கும் என்பதற்கான விவரங்களும் கொடுக்கப்பட்டன. படையெடுத்து வருபவர்கள் பாபிலோன் நதியை வற்றிப்போகச் செய்து, போரில் ஈடுபடாமலேயே நகரத்திற்க்குள் நேராக நுழைந்திடுவார்கள் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டது. அதுமட்டுமா? பாபிலோனைக் கைப்பற்றப் போகிற ராஜாவின் பெயரைக்கூட, அதாவது கோரேசு என்ற பெயரைக்கூட அந்த தீர்க்கதரிசனம் முன்கூட்டியே அறிவித்தது. ( ஏசாயா 44:27-45:2 ).
சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு,பொ.ச.மு 539,அக்டோபர் 5/6 அன்று இரவு,பாபிலோனுக்கு அருகே ஒரு படை முகாமிட்டது. அதன் தளபதி யார்?
பெர்சிய ராஜாவான கோரேசுதான். ஆக, வியக்க வைக்கும் ஒரு தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறிந்தது.
பாபிலோனைக் குறித்து பின்வருமாறும் முன்னறிவிக்கப்பட்டது. " இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை,தலைமுறை தோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரேபியன் கூடாரம் போடுவதுமில்லை;அங்கே மேய்ப்பர் மந்தையை மேய்ப்பதுமில்லை"
( ஏசாயா 13:20 ).ஆக இந்த தீர்க்கதரிசனம் பாபிலோனின் வீழ்ச்சியை மட்டுமே 
முன்னறிவிக்கவில்லை,பாபிலோன் நிரந்திரமாக அழிக்கப்படும் என்பதையும் முன்னறிவித்தது.இந்த வார்த்தைகள் நிறைவேறியிருப்பதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம்.
 
                                    இன்றைய பாபிலோனின் தோற்றம்
ஈராக்கில் உள்ள பாக்தாத் நகருக்குக் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் பூர்வ பாபிலோன் இருந்த இடம் இன்றும் வெறிச்சோடிக் கிடக்கிறது. " அதை சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் " என்று ஏசாயா மூலம் கர்த்தர் சொன்ன வார்தைகள்
நிறைவேறியிருப்பதற்கு அந்த இடம் அத்தாட்சியாக இருக்கிறது. ( ஏசாயா 14:22, 23 ).
பைபிள் நம்பகமான தீர்க்கதரிசனங்கள் அடங்கிய ஒரு புத்தகம் என்பதைச் சிந்தித்து பார்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது அல்லவா? கர்த்தர் கடந்த காலத்தில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார் 
என்றால், எதிர்க்காலத்தில் பரதீஸ் பூமியைப் பற்றிய வாக்குறுதியையும் அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நாம் நிச்சயமாய் இருக்கலாம். ( எண்ணாகமம் 2319: ). ஆம், பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல் நித்திய
ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியுள்ளதால்[ நாம்] நம்பிக்கையாய் 
இருக்கலாம் ( தீத்து 1:3 ).
இதுவரை நாம் சிந்தித்த விஷயங்களை வைத்துப் பார்த்தால்,பைபிள் உண்மையிலே  நிகரற்ற ஒரு புத்தகம் என்பது தெளிவாகிறது. ஆனால், அதன் ஒத்திசைவு, அறிவியல், மற்றும் சரித்திரப்பூர்வ துல்லியம், நடைமுறைக்கேற்ற அறிவு, நம்பகமான தீர்க்கதரிசனம் ஆகியவற்றை வைத்து மட்டும் அதன் மதிப்பைக் கணக்கிட்டுவிட முடியாது.  அதன் மதிப்பு
அதற்கும் அப்பாற்பட்டது. அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு எழுதினார்.
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்,
இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டாயத்திலும் கருக்கானாதாயும்,
ஆத்மாவையும் ஆவியையும்,கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும்
யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது " (எபிரெயர் 4:12).
பைபிளிலுள்ள கர்த்தருடைய ' வார்த்தைகளை, '  அதாவது விஷயங்களை
வாசிப்பது நாம் வாழ்க்கையையே மாற்றி விடலாம். முன்பு ஒருபோதும் செய்திராத வண்ணம் ஒரு புதிய கோணத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க அது உதவலாம். ஒரு வேளை நாம் கடவுளை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், அவருடைய வார்த்தையாகிய பைபிள் கற்பிக்கிற விஷயங்களுக்கு நாம் பிரதிபலிக்கிற விதம் நாம் மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிடும். நாம் இருதயத்தில் புதைந்துள்ள யோசனைகளையும் கூட, அதாவது உள்நோக்கங்களையும் கூட வெளிப்படுத்திவிடும்.
பைபிள் நிஜமாகவே கடவுள் தந்த புத்தகம் தான். அது நாம் வாசிக்க வேண்டிய, ஆழ்ந்து படிக்க வேண்டிய, உயிருக்கு உயிராய் நேசிக்க வேண்டிய ஒரு புத்தகம். அப்படியானால், பைபிளிலுள்ள விஷயங்களைத் தொடர்ந்து ஆழமாக ஆராய்வதன் மூலம் கடவுள் தந்த இந்தப் பரிசுக்கு நன்றி காட்டுங்கள். அவ்வாறு செய்யும்போது மனித்ருக்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்வீர்கள்.  ஆமென்.




ஆண்டவரே,
உமக்கு ஸ்தோத்திரம்..
நீர் செய்த சகல காரியத்துக்கும் நன்றி,
இந்த நிமிடம் வரை, எங்களை சோதனையிலிந்து, தீமையிலிருந்து இரட்சித்து கொண்டபடியால்,
உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
உம் பிள்ளைகளாயிய நாங்கள், உம் வழியில் நடக்க தக்க,
உம் வார்த்தையினால் எங்களை வழி நடத்துக்கிற படியால்
உமக்கு நன்றி ஆண்டவரே.
பரிசுத்த வேதகமம் மூலமாய், உம் ஜீவனுள்ள வார்த்தைகளை எங்களுக்கு
கொடுத்திரே,
நன்றி அப்பா.
பாவிகளாய் இருக்கும் எங்களை, உம் கல்வாரி ரத்ததாலே கழுவி,
எங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டுக்கிறோம்.
இனிமேலும், மாம்ச இச்சையின் படி நடந்து,பாவத்தில் சிக்காமல் இருக்க,
பரிசுத்த ஆவியால் நிரப்பி, என்றும் எங்களை ஆசிர்வதிக்க மன்றாடுகிறோம். 
இதை எல்லாம் இயேசுவின் நாமத்தில் கேட்க்கிறோம், ஜீவனுள்ள பிதாவே. ஆமென்.